தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்

சிறீலங்கா அரசினால் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களாலும், அரசியல் கட்சிகளினாலும் நினைவுகூரப்பட்டன.

நாம் தமிழர் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் கலந்து கொண்டிருந்தார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சுடர் வணக்கம், வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

THANUS kodi தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்அதேசமயம் தமிழர் கடற்கரையான தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் அதிகாலை 6 மணியளவில் ஈழத்தை நோக்கிய திசையில் தீபங்கள் ஏற்றப்பட்டு நினைவு தினம் நடத்தப்பட்டது.

இதனிடையே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வை கோபலசாமி அவர்களின் தலைமையில் எழும்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் நினைவுதினம் இடம்பெற்றது.

vaiko தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்
இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கழக அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செங்குட்டுவான், வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன் மற்றும் கழக உறுப்பினர்கள், மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய வைகே அவர்கள் தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும்  உலகம் எங்கும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவேண்டும், அது ஒன்று போதும் தமிழீழம் ஏன் வேண்டும் என்பதற்கான பதிலும் , அடையும் வழிமுறையும் உண்டு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.

மேலும் வட்டுக்கோடடை தீர்மானத்தைப்போல் இந்த உலகத்தில் எந்த சட்ட வரைபும்  இல்லை, ஈழத்தமிழர்கள் எவ்வளவுக்கு அறிவானவர்களும் ஆற்றலானவர்கள் என்பதும் புலப்படும். அந்த தீர்மானத்தின் வழியிலேயே வந்தவர்தான் தலைவர் பிரபாகரன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

nedu தமிழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள்