ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ரொபேட் முகாபே காலமானார்

முகாபே ஒரு ஆப்பிரிக்க விடுதலை வீரராக விளங்கினார். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக  ஜிம்பாப்வே அதிபராக அவர் இருந்தார் .அவரின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக இறுதியில் நவம்பர் 2017 இல்   பதவியில் இருந்து இறக்கப்பட்டார்.
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர்  ராபர்ட் முகாபே தனது 95 வயதில் காலமானார் என்று அந்நாட்டின் தற்போதைய அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.
“ஜிம்பாப்வேயின் நிறுவன தந்தையும் முன்னாள் அதிபருமான சி.டி. ராபர்ட் முகாபே காலமானதை மிகுந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் என அதிகாரப்பூர்வ அதிபர் எம்மர்சன் ட்விட்டரில் கூறப்பட்டு உள்ளது.
முகாபே சிங்கப்பூரில் இறந்தார், அங்கு அவர் சமீபத்தில் அடிக்கடி மருத்துவ  சிகிச்சை பெற்று வந்தார் என  இந்த விஷயத்தை நேரடியாக அறிந்த  ஆதாரங்கள் ராய்ட்டர்சிடம் கூறி உள்ளது.