நீர்க்காகம் கூட்டுப்படை பயிற்சி மீட்பு ஒத்திகை திருமலையில்

நீர்க்காகம் கூட்டுப்படைப் பயிற்சியில் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையிலுள்ள அஸ்ரப் துறைமுகத்தில் இடம்பெற்றது.

7 பெண்கள், 15 ஆண்கள் பணயக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம், கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

212 விமானப்படையின் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தி இராணுவ கொமாண்டோ, விசேட படையணி, இராணுவப் புலனாய்வுப் படையணி மற்றும் கடற்படை விசேட கடற்படைப் பிரிவினர்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தக் கூட்டுப்படைப் பயிற்சிகள் மத்திய பாதுகாப்புப் படைத் தளபதியும் கூட்டுப்படைப் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே தலைமையில் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.