சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்த அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.