சூடானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப்புரட்சியை தாம் முறியடித்துள்ளதாக சூடானை ஆட்சிபுரியும் படைத்துறை சபை நேற்று (11) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த இராணுவப்புரட்சிக்கு திட்டமிட்ட 16 படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தில் பணிபுரிந்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற படை அதிகாரிகளுமே இந்த புரட்சிக்கு திட்டமிட்டவர்கள். ஆனால் சூடான் இராணுவத்தினர் அதனை முறியடித்துள்ளனர்.
தற்போதைய இந்த நடவடிக்கையானது படைத்துறை சபையின் அதிகாரங்களை சனநாயக நடைமுறைகளுக்கு மாற்றும் பேச்சுக்களுக்கு தடையாக அமைந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு உதவிபுரிந்த மேலும் பல படை அதிகாரிகளை நாம் தேடிவருகின்றோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.