சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்குள் நுழைந்த அழையா விருந்தாளி

கொழும்பு  டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சந்திப்பொன்று நிகழ்ந்த போது திடீரென சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அங்கு பிரவேசித்தார். இதனால் கட்சி அங்கத்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மைத்திரி ஆச்சரியத்திற்குள்ளானார்.

அண்மைக்காலமாக மகிந்தவுடன் நல்லுறவை பேணி வரும் சந்திரிகாவுடன் மைத்திரி சற்று விலகியிருந்தார். ஆனால் மகிந்த கோத்தபயாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, கோத்தபயாவை தான் ஆதரிக்கவில்லை என்றும் அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தும் வந்திருந்தார்.