சிறைச்சாலையில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

சிறைச் சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ள நிலையில், 208 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 87 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம்  பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.