சிறைக் கைதிகளை பார்வையிட தற்காலிக தடை

இலங்கையிலுள்ள சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை கைதிகளுக்கு இடையே கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த சனிக்கிழமை முதல் கைதிகளைப் பார்வையிடுவதற்கு ஒருவருக்கு மாத்திரமே அனுமதி வழக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.