இலங்கையில் சிறுபான்மையிரை இலக்கு வைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மிகவும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும் உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்று இருவருடங்கள் கடந்து விட்ட நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபையினால், அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,
Our thoughts are with the people who lost their loved ones or were wounded in the bombings. We must honour their memories & forge unity against hatred that may seek to discriminate any community.
— Amnesty International South Asia (@amnestysasia) April 21, 2021
இலங்கையில் சுமார் 250க்கும் மே்பட்மோர் பலியான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில், உயிரிழந்த மக்களுக்கு எமது அஞ்சலியை தெரிவித்துகொள்கின்றோம்.
அதே வேளை எந்தவொரு சமூகத்தையும் அடக்குமுறைக்கு உட்படுத்தக்கூடிய வெறுப்புணர்விற்கு எதிராக ஒன்று பட வேண்டும்.
இந்த தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதுடன் குற்றவாளிளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. குறித்த விசாரணை சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்னெடுக்க வேண்டும்.
அதே வேளை சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வித விசாரணைகளுமின்றி அவர்களை தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற மிகவும் மோசமான சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.
அதனை மறுபரிசீலனை செய்வதற்கும் முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை டுக்க வேண்டும் என்று மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.