சிறீலங்காவில் நடைபெற்ற இனஅழிப்புக்கு சர்வதேச விசாரணை நடாத்த ஐ.நாவிடம் கோரிக்கை – கனடிய எதிர்கட்சி

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டு அபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபு பின்வருமாறு:

தற்போது செயற்பாட்டிலுள்ளவெளிநாட்டு அலுவல்கள் மற்றும்சர்வதேச முன்னேற்றத்திற்கானகுழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் கோரிக்கை வருமாறு:

1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும்பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும் எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.

2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அடிப்படை மனித உரிமைகளை மதித்தவாறு இனவாதமற்றும் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்க அதிகரித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசைவேண்டுகிறோம்.

3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில்பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்கசிறீலங்கா அரசு முனையவேண்டும், அத்துடன் சமயத் தலங்களைப்பாதுகாப்பதற்கும் மதரீதியானசிறுபான்மை இனங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள் சிறீலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கனடியநிலைப்பாட்டை மீளவும்உறுதிசெய்வதுடன், அந்நாட்டில் வாழும்அனைத்து இன மக்களுக்குமானஅமைதி, இணக்கப்பாடு மற்றும்பொறுப்புக்கூறல் என்பவற்றை முன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவு தொடருமெனவும் உறுதிகூறுகிறோம்.

5. 2009 போரின் இறுதிப்பகுதி உட்பட, தமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில் நடைபெற்றிருக்கக்கூடிய இன அழிப்புக்குசுதந்திரமான சர்வதேச விசாரணைநடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம்.

6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதுடன், இந்தஅறிக்கைக்கு அரசாங்கம் விரிவானபதிலை வழங்க வேண்டு மென்றும் கோருகிறோம்.