சிறீலங்கன் எயார்லைன்ஸ் தனது சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது சேவையை எதிர்வரும் 30ஆம் திகதி வரை நிறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சிறீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பறப்பை மேற்கொள்ளும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டப்பாடுகளை கருத்திற் கொண்டு அதன் திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் விமான நிறுவனங்களின் காகோ சேவைகள் தேவைப்படும் போது தொடர்ந்து இயங்கும். இது தொடர்பான மேலதிக தகவலுக்கு, பயணிகள் தங்கள் பயண வெளியீட்டு முகவர், அருகிலுள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது சிறீலங்கன் எயார்லைன்ஸ் 24 மணிநேர தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.