சிரிய அதிபர், அவரது மனைவிக்கு  கொரோனா தொற்று

சிரிய அதிபர், அவரது மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரிய அதிபர் அலுவலகம் தரப்பில், “சிரிய அதிபர் ஆசாத், அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் ஆகியோர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரியாவில் இதுவரை 15,981 பேர்கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,063 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.