சவேந்திர சில்வா பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப்பாவி – வைகோ கண்டனம்.!

ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணம் மாறும்எனவும்  தமிழீழ இனப்படு கொலையாளிகள்தப்ப முடியாது என மதிமுக பொதுச்செயலர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வைகோதெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்குற்றவாளி  சவேந்திர சில்வா இலங்கையின் தலைமை இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு  கண்டனம் தெரிவித்துள்ளார்
அதில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மனிதகுல வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலைகளில், கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த ஈழத்தமிழர் படுகொலைதான் மிகக் கொடூரமானதாகும்.

ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்களப் பேரினவாதஅரசு நடத்திய தாக்குதல்களில், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்தப் படுகொலைகளை நடத்திய சிங்கள இராணுவ த்தின் 58 ஆவது டிவிசன் கமாண்டர் சவேந்திர சில்வா, யூதர்களைக் கொன்றுகுவித்த அடால்ப் இச்மனைப் போல், பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டியகொலைகாரப் பாவி ஆவான்.

ஐ.நா.வழங்கிய உதவிப் பொருட்கள்,யுத்தத்தால் வீடு வாசல்களை இழந்து, காடுகளுக்குள் நிர்கதியாக நின்ற அப்பாவித் தமிழர்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தவன்;

ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைப்பிடித்துச் சுட்டுக்கொல்ல  ஆணை இட்டவன்;

தமிழ்ப் பெண்களின் மானத்தை கற்பைச்சூறையாடி, கொன்று குவித்தஅரக்கன் இறுதிக்கட்டப் போரின்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தமிழர்களின் மருத்துவ முகாம்கள் மீது குண்டுகளை வீசி,அங்கே சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தத மிழர்களைக் கொன்றவன்;

பால் பவுடரும் உணவுப் பொருட்களும் வாங்கவரிசைகளில் நின்ற தாய்மாய்கள் மீதும்குண்டுகளை வீசக்காரணம்ஆனவன்;கொலைகார இராணுவத்தினரைவெள்ளை வேன்களில் அனுப்பி, தமிழர்களைஇரத்த வேட்டை ஆடியவன்;

அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கிமூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன்தலைமையிலான மூவர் குழு வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள, நெஞ்சைப்பதற வைக்கின்ற படுகொலைகளைச் செய்தகயவன்தான் சவேந்திர சில்வா.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலிலும், டப்ளின், பிரெம்மன் தீர்ப்பு ஆயங்களிலும் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கைகளில் சவேந்திர சில்வாவின் கொலை பாதகச் செயல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம், சிங்கள இராணுவத்தின் இரண்டாவது உயர் பதவிக்கு சவேந்திரசில்வாவை, அதிபர் மைத்ரிபால சிறிசேனாநியமித்த போதே தமிழர்கள் தலையில் இடிவிழுந்தது. இப்போது தலைமைத் தளபதியாக நியமித்துள்ளார்.

கொலைகார ராஜபக்சே அரசில் இராணுவஅமைச்சராக இருந்த, சிறிசேனாவும்இனப்படுகொலைக் குற்றவாளியே.