சந்திரிக்கா தலைமையில் புது அரசியல் கூட்டணி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி ஸ்தாபிப்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பதிலாக இந்த புதிய கூட்டணி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

புதிய கூட்டணியின் சின்னமாக வெற்றிலைக்கு பதிலாக கதிரையை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமரவீர மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.