சட்டத்தை மீறிய 25 ஆயிரத்து 31 பேர் கைது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியினுள் 354 வாகனங்களை காவற்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆறாயிரத்து 426 வாகனங்கள் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.