கோத்தபயா தொடர்பாக சந்திரிகாவின் கருத்து

ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபயா ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோத்தபயாவிற்கு தான் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கின்றார். மேலும் தான் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பசில் ராஜபக்ஸ கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்றும்  ராஜபக்ஸக்களின் பேச்சை எவரும் நம்பப் போவதில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

கட்சியா நாடா என்ற தெரிவு வரும் போது, தான் நாட்டிற்கே முன்னுரிமை வழங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், கோத்தபயாவினால் நாட்டை ஆள முடியாது எனவும்   ராஜபக்ஸகளின் பேராசையே அவர்களது குடும்பத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.