கோத்தபயாவிற்கு சார்பான தமிழ் அரசியல்வாதிகள்

12.08 அன்று சுகததாச உள்ளரங்கில் மகிந்த ராஜபக்ஸ தலைமையில்  நடைபெற்ற மாநாட்டில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சில தமிழ் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த வரிசையில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனும் குறித்த மாநாட்டிற்கு சென்றிருந்தார்.

அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், கோத்தபயா ராஜபக்ஸவை தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்றும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்கு அவருக்கே என்றும் உறுதியளித்துள்ளார்.