கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் காரணமாக நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆபத்தினை கொழும்பு வாழ் மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கொழும்பு மெனிங் சந்தை சில தினங்களாக திறந்துள்ளது. எனினும் அங்கு பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் கூட்டமாக செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவதால் கொழும்பில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

safe கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?

பொருட்களை கொள்வனவு செய்வோர் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றருக்கும் மேற்பட்ட இடைவெளியில் கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.