கொரோனா பலியெடுத்தோர் தொகை 801ஆக அதிகரிப்பு – நேற்று 15 மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நாளாந்த கொரோனா மரணப் பட்டியலில் நேற்றுப் பதிவாகியுயள்ளது.

பண்டாரகம, அம்பிட்டிய, கணேமுல்ல, ராகம, குளியாப்பிட்டி, பிபிலை, கல்கிரியாகம, பசறை, வஸ்கடுவ, நேபொட, போம்புவல, நாவுன்துடுவ, கொழும்பு 07 மற்றும் மடுல்கலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் எனவும், மற்றைய 5 பேரும் ஆண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்தஎண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.