கொரோனா தொற்று; 24 மணி நேரத்தில் புதிய நோயாளிகள் இல்லை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடையவர்கள் யாரும், நேற்று முன் தினம் இரவில் இருந்து நேற்று இரவு வரைக்கண்டறியப்படவில்லை எனச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று சந்தேகத்தில் 255 பேரும், கொரோனாத் தொற்று உடையவர்களாக 102 பேரும் இனங்காணப்பட்டனர். அதிலும் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியதால் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.

மேலும், வடபகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்ட 7 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்