கோவிட்-19 – இறந்தோர் எண்ணிக்கை 20,499 ஆக உயர்வு

உலகில் வேகமாக பரவிவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இதுவரை 172 நாடுகளுக்கு பரவியுள்ளதுடன், 20,499 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயினால் இதுவரை 451,355 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுப்பதற்காக உலகின் சனத்தொகையில் ஏறத்தாள நான்கில் ஒரு பகுதி மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் 738 பேரும், இத்தாலியில் 683 பேரும், பிரான்ஸில் 231 பேரும் பலியாகியுள்ளனர்.

ரஸ்யாவில் ஏறத்தாள 700 பேர் பாதிப்பட்டுள்ளபோதும் யாரும் இதுவரை மரணமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இதுவரை 827 பேர் பலியாகியுள்ளதுடன், 60,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.