கொரோனா தொற்றினால் உயிரிழப்புக்கள் 44 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், 44 ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா தொற்றையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்த 24ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளையும் பாதித்துள்ளது.

உலகம் முழுவதுமாக 51,429,703 பேர் பாதிக்கப்பட்டும், 1,272,328 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

மேலும் சீனா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய கண்டம் ஆகிய பகுதிகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்று இப்போது அமெரிக்காவை அதிகமாக பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது