கொரோனா தொடர்பில் நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் ஆக கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அனைத்து விமானங்கள் மற்றும் கப்பல் பயணிகளையும் தெளிவுபடுத்துவதற்காக சுகாதார அமைச்சின் மூலம் அச்சிடப்பட்ட ஆவணங்கள் உண்டு. இதில் அருகில் உள்ள வைத்தியசாலைகளும் குறிப்பிட்டுள்ளன. சீனாவில் இருந்தும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் அவர்கள் பணியாற்றும் இடங்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இவர்கள் முக கவசம் அணிவது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த நோய் பரவும் முறை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. வர்த்தக மற்றும் பொருட்கள் மூலம் நோய் பரவக்கூடிய நிலை இல்லை. இதனால் சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை வரையறை செய்ய வேண்டியது இல்லை.

பீஜிங், சங்ஹாய் ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கவனத்தில் கொள்ளும் போது எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை. முக கவசம் அணிவது அத்தியாவசியமானதல்ல என்பதும் உணரப்படவில்லை. இது தேவையான வகையில் முக கவசம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமை ஏற்பட்டால் மாத்திரம் அதற்கு ஏற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் சுற்றுலாத்தொழில்துறைக்கு அழுத்தம் ஏற்படுகின்றது. ஏனைய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேவையான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் புத்தியீவிகள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் நேரடியான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸ் மற்றும் முக கவசம் தொடர்பாகவும் தேசிய அவசர நிலைமையாக கருத்தில் கொண்டு முக கவசத்தை இலவசமாக வழங்கப்படுமாயின் இதனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் என்றும் முழுமையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா? என்பது குறித்தும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி செயலணி அமைக்கப்படுமா? என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேள்ளி எழுப்பினார்.

இதன் போது அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேலும் தெரிவிக்கையில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மாத்திரமன்றி ஏனைய நாடுகளில் இருந்தும் பயணிகள் வருகின்றனர். நாட்டில் துறைமுகங்களின் மூலம் வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகின்றது. வூஹான் மாநிலத்தில் இருந்து இலங்கையர்களை மீட்டெடுப்பதற்கு முடிந்தமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் சீனாவுடன் முன்னெடுத்துவரும் தொடர்புகளே காரணமாகும்.

நான்காவது நாடு என்ற ரீதியில் நாம் அனுப்பிய விமானத்தின் மூலம் சீனாவில் இருந்து எமது நாட்டவர்களை மீட்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வூஹான் மாநிலத்தில் இருந்து வருகை தந்த மாணவர்கள் மிகவும் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றனர்.

சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானங்களும்; விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுகின்றன. பெற்றுக்கொள்ளப்படும் தகவல்கள் விமான நிலையத்தில் கணனி மயப்படுத்தப்பட்டு பிரதேச தொற்றுநோய் பிரிவிற்கு வழங்கப்படுகின்றன. அத்தோடு பயணிகள் இருக்கும் இடங்களுக்கும் அறிவிக்கப்படுகின்றன. சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் இவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பரிசோதிக்கின்றனர்.