ஆர்ப்பாட்டத்துக்கென பிரத்தியேக இடம்.

கொழும்பு காலி முகத்திடலை அண்மித்த பகுதியில், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக பிரத்தியேக இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆர்ப்பாட்ட இடம்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நகரின் பல்வேறு இடங்களில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக, பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுகிறது. இதற்கு தீர்வுக் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு லோட்டஸ் வீதி, காலி முகத்திடல், நகர மண்டப பகுதி, லிப்டன் சுற்றுவட்டம் உள்ளிட்ட சன நெரிசல் மிக்க இடங்களை, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்ந்தெடுப்பதால், அதிக வாகன நெரிசல் ஏற்படும்போது, சாதாரண பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக, வீதியை மூடுதல், ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க நீர்த்தாரை, கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளால், ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லாது பொது மக்களும் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன.

இவ்வாறு பல விடயங்களை கருத்திற்கொண்டு, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்டாத வகையிலும் அன்றாடச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக, இவ்வாறு பிரத்தியேக இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது