கொரோனா தடுப்பூசி சர்வதேச எல்லைகளைத் திறக்குமா?

அவுஸ்திரேலிய முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டாலும் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மாற்றம் கொண்டு வருவதை என்பதை கடைசியில் நிகழும் ஒன்றாகவே இருக்கக்கூடும் எனக் கூறியிருக்கிறார் அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரியான Paul Kelly.
உலகெங்கும் இந்த கிருமியைக் கட்டுப்படுத்த பல நாடுகள் போராடி வருவதைக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச வருகைகள் அக்கிருமித்தொற்று பரவலுக்கு தொடர்ந்து முக்கிய காரணமாக இருப்பதாக  சுட்டிக்காட்டியுள்ளார்.