கொரோனா: இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற பின்னணியில் அங்கிருந்து விமானங்கள் ஆஸ்திரேலியா வருவது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

இது மே 15ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இன்றையதினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு oxygen supplies, ventilators மற்றும் personal protective equipment உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அவுஸ்திரேலியா அனுப்பிவைக்கவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார் என எஸ்பிஎஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.