கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுத் தலைவர், பேச்சாளர் பதவிகள்; 22 ஆம் திகதியே இறுதி முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர், பேச்சாளர், கொரடா தேர்வுகளிளுக்கு நேற்று கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டம் முடிவு கள் எடுக்கப்படாமல் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று கூடிய நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள த.சித்தார்த்தன் சமுகமளிக்கவில்லை. இன்றும் சித்தார்த்தன் கொழும்பிற்கு வருகை தர மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இவற்றின் காரணமாக அடுத்த நாடாளு மன்றஅமர்வு தினமான எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கல நாதன் கோரியுள்ள நிலையில் இவ்விடயம் அதீதகவனிப்புக்குள்ளாகியி ருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.