கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் இன்று வரை 846 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

வைத்தியர் அ.லதாகரன் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.

இது வரையில் இலங்கையில் கொரோனாவால் 38,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கோவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.