Tamil News
Home செய்திகள் கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா!

கிழக்கு மாகாணத்தில் இன்று வரை 846 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

வைத்தியர் அ.லதாகரன் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றார்.

இது வரையில் இலங்கையில் கொரோனாவால் 38,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 170க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கோவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version