தற்போது கியூபாவில் தரித்து நிற்கும் எம்.எஸ். பிரெய்மர் கப்பலில் உள்ள சுமார் 700 பிரித்தானிய பயணிகள் பயணிகள் நான்கு தனித்தனி விமானங்களில் தமது நாட்டுக்கு பயணமாகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட காரணத்தால் பலநாடுகளாலும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 1000 போர் கொண்ட குறித்த கப்பலை தனது துறைமுகத்தில் கரைதட்ட கியூபா அனுமதிவழங்கியி ருந்தது.
இந்த நிலையில், அங்கிருந்து பிரித்தானிய பயணிகள் தரம் பிரியப்பட்டு இன்று நான்கு விமானங்களில் பிரித்தானியா புறப்பட்டுள்ளனர் என குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கண்காணிப்பில் என தரம்பிரிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு விமானங்களில் பயணப்பட்டுள்ளனர்.
விமானப் பயணத்துக்கு ஏற்ற உடல்நிலை கொண்டிராதவர்கள் என கருதப் படுவோருக்கு கியூபா உதவிகளையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்கும் என கூறப்படுகிறது. ஆயினும் இவ்வாறு எத்தனைபேர் உள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
இது இவ்வாறிருக்க இன்றுவரை கியூபாவில் உறுதிப்படுத்தப்பட்ட 11 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இருப்பதாகவும் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கியூப அரசாங்கம் தெரிவித்துள்ளது.