காவல்துறை, அதிரடிப்படையின் எதிர்ப்பினை மீறி தொடரும் போராட்டம்  

காவல்துறை மற்றும்  விசேட அதிரடிப்படையினரும் தடைகளை ஏற்படுத்தியபோதிலும் அவற்றினையும் தாண்டி  பொத்துவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

IMG 0097 காவல்துறை, அதிரடிப்படையின் எதிர்ப்பினை மீறி தொடரும் போராட்டம்  

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு அமைவாக பொத்துவிலில் இருந்து வாகன பேரணி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

துற்போது வாகன பேரணியை முன்னெடுப்பதற்காக சிவில் அமைப்புகள்,அரசியல் கட்சிகளின்,சர்வமத பிரதிநிதிகள்,பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG 0102 காவல்துறை, அதிரடிப்படையின் எதிர்ப்பினை மீறி தொடரும் போராட்டம்  

பொத்துவில் நகரில் போராட்டம் ஆரம்பமானபோது விசேட அதிரடிப்படையினரும் கால்துறையினரும் இணைந்து போராட்டத்தினை தடுக்க முற்பட்டதுடன் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்த பதாகையினை அகற்றி , நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது கால்துறை தாக்குதல் நடாத்த முற்பட்டதை தொடர்ந்து முறுகல் நிலையேற்பட்டது. அதனை தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினரின் எதிர்ப்பினையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக பொத்துவில்  ஏற்றம் பகுதியில் காவல்துறை தடைகளை ஏற்படுத்தி போராட்டத்திற்கு சென்றவர்கள் வழி மறிக்கப்பட்டு கடுமையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

IMG 0121 காவல்துறை, அதிரடிப்படையின் எதிர்ப்பினை மீறி தொடரும் போராட்டம்  

இதன்போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களும்  காவல்துறையினரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆக்கரைப்பற்று பகுதிக்கு பேரணி வருகைதந்ததை தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த போராட்டம் அக்கரைப்பற்று நகர் ஊடாக அட்டாளைசேனை வரையில் நடைபெற்றது.

காவல்துறை நீதிமன்ற கட்டளையினைக்கொண்டு தடைகளை ஏற்படுத்தியபோதிலும் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.