காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிப்பு

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான  இன்று வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அத்தோடு, யாழ்ப்பாணம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புப்பட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிளிநொச்சியில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.