காணாமற்போன கடற்றொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார்

புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற்போன சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.