கண்கள் மூலமாக பரவும் கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் கண்கள் ஊடாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் தொற்றுவதைத் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றிய ஒருவர் தும்மினால், இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவரின் கண் ஊடாக உடலுக்குள் செல்லும் ஆபத்து காணப்படுகின்றது.

இதனால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் பயன்படுத்துவதும் பயனற்ற ஒன்றாக மாறி வருகின்றது.

இதனால் மக்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியம் தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.