சீனாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் படைமுகாமுக்கு

சீனாவின் இருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களும் தியத்தலாவை படைமுகாமிற்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.இன்று (01) காலை சிறப்பு விமானம் மூலம் குறித்த மாணவர்கள் சீனாவின் வுஹான் நகரில் இருந்து மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பின்னர், மத்தல விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் சிறப்பு பஸ் மூலம் தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள 32 அறைகளுடன் கூடிய வைத்திய முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு இவர்கள் இரண்டு வாரக்காலம் தடுத்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.