ஒரேநாளில் 22 பேர் பலி – உச்சத்தைத் தொடும் இலங்கையின் கொரோனா மரணங்கள்

இலங்கையில் நேற்று மாத்திரம் 22 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் ஒரே நாளில் நேற்றே அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நேற்றுமுன் தினம் 19 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.