ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் – சிறிலங்கா அரசு முடிவு

ஐ.நா. பாதுகாப்பு சபை நிறைவேற்றியுள்ள தீரம்மானத்தின் அடிப்படையில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அண்மையில் சிறிலங்கா வந்து சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தையும், மதவன்முறையையும் முழுப் பலத்துடன் எதிர்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக ஐ.நா. சபை தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள முறைகளை பின்பற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலில் 258பேர் உயிரிழந்தனர். சிறிலங்காவில் செயற்பட்டு வந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, மதவாத அமைப்புகள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் போது, சிறிலங்கா அரசு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.