ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவிற்கு ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் வழங்க அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி கூறும் போது, ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். அது மட்டுமன்றி ஒருங்கிணைந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக உள்ளது.

முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.