ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையவா்களை கண்டறிய விஷேட நடவடிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை அறிவித்தார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி இந்த நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு சென்ற இலங்கைச் சோ்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வர் அண்மையில் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனைத் தொடா்ந்து அந்த நால்வரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைத்த ஒருவரும் கொழும்பு மாளிகாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டாா்.

இதன் தொடா்ச்சியாக ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் நாட்டில் உள்ளனரா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.