ஏறாவூர் நகர் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி!

மட்டுக்களப்பு,ஏறாவூர் நகர் பகுதிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததுடன் ஊடகவியலாளரை சுற்றி வலைத்து அச்சுறுத்தி அவரிடம் இருந்த வீடியோவை அழிக்குமாறு கூறியுள்ளனர்.
Image may contain: 1 person, walking, standing and outdoor
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று  ஏறாவூர் நகர் பகுதியில் தொலைதொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த ஊடகவியலாளர் குகராசு சுபோஜனை சம்பவ இடத்திற்கு வந்த சிலர் அச்சுறுத்தி வீடியோ எடுக்க விடாது தடுத்ததுடன். ஊடகவியலாளரை சுற்றி வலைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
Image may contain: 5 people, outdoor
இதனால் பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர் ஏனை சில ஊடகவியலாளர்களின் உதவியுடன் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அகன்று சென்றுள்ளார்.
மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் ஏறாவூர் நகர பகுதிக்கு சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான ஊடக அடக்குமுறை இதுவாகும்.
Image may contain: 2 people, people standing, people walking, sky and outdoor
எனவே ஊடகவியலாளரை அச்சுறுத்திய குறித்த குழுவினரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்ய வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.