எத்தோப்பியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

கடந்த நவம்பர் மாதம் முதல் எத்தோப்பியாவின் டீக்ரே பகுதியில் மத்திய அரசு படைகளுக்கும் டீக்ரே பகுதியை ஆண்ட டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஏற்பட்ட போர் காரணமாக சுமார் 22 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக எத்தோப்பியாவின் மத்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் சுமார் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்டை நாடான சூடானில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐ.நா.வின் கணக்கு சுட்டிக்காட்டியுள்ளது.