உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ரிஷாத்திடம் நேற்றும் 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையில் ஆஜரானார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை சம்பந்தமாக வாக்குமூலம் அளிக்க அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டார் எனக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆயினும், நேற்று குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமையகத்துக்கு வருகை தந்தபோது ஊடகவியலாளர்கள்எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அழைக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை என்றார். நேற்று சுமார் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை இடம்பெற்றது.