ஈஸ்டா் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம் – கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

இன்று ஆரம்பமாகும் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய நாடாளுமன்ற விவாதத்துக்கு நான்கரை கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யார் என்ற பதில் கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

முன்னரும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் 11 நாட்கள் விவாதங்கள் நடந்துள்ளன. இதற்காக 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகி வெள்ளிக் கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற வுள்ளது.

இந்த விவாதத்துக்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.