ஈரான் தலைவா் இலங்கை வந்தாா் – கடும் பாதுகாப்பு

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr.Ebrahim Raisi) உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வரவேற்பளிக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதியின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது.