ஈழ அகதிகளுக்கு குடியுரிமை – திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றில் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மாநிலங்களவை கூட்டத்தின் போது, திரிணமூல் உறுப்பினர் அகமது ஹாசன் பேசும் போது, பாகிஸ்தான், இலங்கை, ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் துன்புறுத்தப்படும் மற்றைய சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க மசோதாவை மத்திய அரசு முன்மொழிகின்றது. அதை ஈழத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அதே அடிப்படையில் துன்புறுத்தப்பட்டு இந்தியாவிற்கு வருகை தந்த ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்களை திருப்பி அனுப்பி அவர்கள் மறுவாழ்வுக்கு அங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அகமது ஹசன் கேட்டுக் கொண்டார்.