இலங்கை கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர் படுகாயம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கியுள்ளனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 580இற்கும் மேற்பட்ட விசைப் படகுகளில், 3000 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றைய தினம்(26) மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர்.

இதில் பூண்டிராஜன் என்பவரின் விசைப்படகில் 6பேர் சென்றிருந்தனர். இவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டித்துக் கொண்டிருந்த சமயம் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் படகிலிருந்த சுரேஷ் (38) என்பவர் காயமடைந்தார்.

அதன் பின்னர் அந்த மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். இன்று அதிகாலை மீனவர்கள் கரை திரும்பியதும், சுரேஷை சக மீனவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எங்கள் படகை முதலில் கற்கள் மற்றும் போத்தல்கள் கொண்டு தாக்கினர். இதில் சுரேஷ் காயமடைந்தார். நாங்கள் பயம் காரணமாக கரை திரும்பி விட்டோம்” என்று கூறினார்.

இத்தாக்குதலிற்காக பல்வேறு அரசியல் கட்சியினரும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்