இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இது வரையில் சுமார் 60,000 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 29ம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் செயற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வரையில் 37,825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இருந்தும் தொற்றாளர் மற்றும் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
இது வரையில் 316 பேர் கொரோனா தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளனர்.