இலங்கையில் மோசமடையும் நிலை – கொரோனாவால் நேற்று மேலும் 9 பேர் மரணம்

இலங்கையில் இன்று மேலும் 09 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுடன் கொரோனா தொற்று காரணமாக மரணத்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 95, 61, 50, 70, 45, 76, 61, 42, 73 வயதுகளை உடைய 6 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் அடங்குகின்றனர். கொழும்பு-15, அனுராதபுரம், குருநாகல், நீர்கொழும்பு, கொழும்பு-12, யாழ்ப்பாணம் -தீவகம், குருதெனியா மற்றும் மாவநெல்லை பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று மேலும் 514 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டனர். இவர்களுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 69,862 ஆக உயர்ந்துள்ளது