ஜெனிவாவுக்கான வியூகம் வகுக்க இன்று முக்கிய கலந்துரையாடல் – ஜனாதிபதி கூட்டுகிறார்

 

ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், இலங்கை எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இன்று பி.ப 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உயர் மட்ட அமைச்சர்கள் சிலரும் இக் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.