இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த நாட்களில் 34 மரணங்கள் கொரோனா தொற்றுக்காரணமாக நிகழ்ந்திருந்த நிலையில், இன்றைய தகவலில்  நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக்கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.